தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஒப்புதல் 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளியன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2019, 8:11 pm IST

புது தில்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளியன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திங்களன்று உத்தரவு வெளியிட்டார். பின்னர் அது தொடர்பான மசோதாவும், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர்  மற்றும் லடாக் என்னும்  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் கடந்த திங்களன்றும், மக்களவையில் செவ்வாயன்றும் நிறைவேற்றப்பட்டது.  அதைத் தொடர்ந்து இதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளியன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த மசோதாவானத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார் விரைவில் இதுகுறித்து அரசாணைவெளியிடப்படும் என்று தெரிகிறது.. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.