மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அஸ்ஸாம் பெண் தற்கொலை! என்.ஆர்.சி பட்டியல் வெளியீடு காரணமா?

என்.ஆர்.சி இறுதிப் பட்டியல் சனிக்கிழமை காலை வெளியிடப்பட்டது. இதிலிருந்து 19 லட்சம் (19,06,657) பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. மொத்தம் 3,30,27,661 பேர் தங்களின் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2019, 12:32 pm

Muthumari

அஸ்ஸாம் மாநில பெண் ஒருவர் இன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதன் வரைவுப் பட்டியல், கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். தற்போது விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி, என்.ஆர்.சி இறுதிப் பட்டியல் சனிக்கிழமை காலை வெளியிடப்பட்டது. இதிலிருந்து 19 லட்சம் (19,06,657) பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. முன்னதாக, மொத்தம் 3,30,27,661 பேர் தங்களின் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். 

இந்த சூழ்நிலையில், அசாமின் சோனித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். ஷெயேரா பேகன் என்ற பெண், என்.ஆர்.சி-யில் தனது பெயர் வருமா என்ற பதற்றத்தில், தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனால், சோனித்பூர் காவல் கண்காணிப்பாளர் சஞ்சித் கிருஷ்ணா கூறும் போது, அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இது நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் என்.ஆர்.சி.யில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.