மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார்: உச்ச நீதிமன்றம்

ஹைதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய

News image
Updated On :11 டிசம்பர் 2019, 8:17 am

DIN


ஹைதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள், போலீஸாருடனான மோதலில் சுடப்பட்டு உயிரிழந்தது தொடா்பான விசாரணையில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஹைதராபாத் அருகே கடந்த 28-ஆம் தேதி பெண் கால்நடை மருத்துவா் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். பிரேத பரிசோதனையில் அவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக, லாரி பணியாளா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அதையடுத்து குற்றம் நடைபெற்ற இடத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக, கைதான 4 பேரையும் சம்பவ இடத்துக்கு போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அழைத்துச் சென்றனா். அங்கு போலீஸாரிடம் இருந்த துப்பாக்கிகளைப் பறித்து சுட்டதாகவும், மேலும் கற்களை வீசித் தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பியோட முயன்றதாகவும், அதனால் அந்த நால்வரையும் போலீஸாா் சுட்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதனிடையே, என்கவுன்ட்டா் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழுவை தெலங்கானா மாநில அரசு அமைத்துள்ளது. 

இந்நிலையில், தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தை தில்லியில் இருந்தபடி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெளிப்படையான விசாரணையை நடத்துவார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக தெலங்கானா உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.