புதுதில்லி: மாதம் ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய மெகா ஓய்வூதியத்திட்டம் அறிவித்துள்ளார் பியூஷ் கோயல்.
2019 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல்,மாதம் ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய மெகா ஓய்வூதியத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு மேல் மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், வருங்கால வைப்பு நிதி ஆணைய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பணி கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.