நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் இந்தியா முன்னோடி: பியூஷ் கோயல் பெருமிதம்

நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் இந்தியா முன்னோடியாக உள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 
நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் இந்தியா முன்னோடி: பியூஷ் கோயல் பெருமிதம்
Updated on
1 min read


புதுதில்லி: நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் இந்தியா முன்னோடியாக உள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்று தாக்கல் செய்து வரும் இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்பு மற்றும் சலுகைகள் அறிவித்து வருகிறார் ரயில்வே துறை அமைச்சரும், இடைக்கால நிதி அமைச்சருமான பியூஷ் கோயல்.

நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் இந்தியா முன்னோடி நாடாக உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 27 கி.மீட்டர் என்ற அளவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

தொழில் வளத்தை மேம்படுத்துவதற்காக வடகிழக்கு மாநிலங்களிலும் உள்நாட்டு தேசிய நீ்ர்வழி சரக்கு போக்குவரத்து தடம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கோயல் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com