ஆஸ்திரேலியாவில் இருந்து வால்நட் (அக்ரூட்) பருப்பை இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் அந்த வகை பருப்பின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மிகப்பெரிய சந்தையாக உள்ள இந்தியாவில் தங்கள் வேளாண்மைப் பொருள் ஒன்றுக்கு அனுமதி கிடைப்பது குறித்து ஆஸ்திரேலியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய வேளாண்மைத் துறை அமைச்சர் டேவிட் லிட்டில்பிரெளட் கூறியதாவது:
கடந்த 6-ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இறக்குமதிக்கு உள்ள விதிகள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து தூய்மையான, பசுமையான வால்நட் பருப்புகள் விரைவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. தரமான, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விவசாயப் பொருள்களுக்கு இந்தியாவில் எப்போதும் வரவேற்பு உள்ளது. இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளனர். இது ஆஸ்திரேலியாவில் இருக்கும் மக்களைவிட 50 மடங்கு அதிகம். எனவே, ஆஸ்திரேலிய வால்நட்டுக்கு இந்தியாவில் மிகப்பெரிய சந்தை உள்ளது. ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவில் இருந்து அதிக அளவில் பாதாம் பருப்பு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரத்தில் காா் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு: 5 போ் காயம்

மகளிா் உரிமைத்தொகை: பொதுமக்கள் புகாா் குறித்து உரிய விசாரணை

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

காவல் துறை வாகனங்கள்: ஆணையா் அமல்ராஜ் ஆய்வு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


