பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

நாடாளுமன்ற அவைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு: முத்தலாக், குடியுரிமை மசோதாக்கள் காலாவதியாக வாய்ப்பு

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

News image
Updated On :13 பிப்ரவரி 2019, 8:32 pm IST

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தற்போதைய அரசின் கடைசி கூட்டத் தொடராக இது அமைந்துள்ளது.

இந்நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இரு மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறாத காரணத்தால் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் மற்றும் குடியுரிமை ஆகிய மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

இருப்பினும் எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளின் காரணமாக அவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்தது. பொதுவாக மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும் அவை காலாவதியாகாது. 

ஆனால், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இந்நிலையில், இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலிலும், இந்த இரு மசோதாக்களும் விரைவில் காலாவதியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.