புது தில்லி: நாட்டில் உள்ள ஐந்து மத்திய தர விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தமானது பிரதமர் மோடியின் நண்பரான கவுதம் அதானியின் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னௌ, கவுகாத்தி, திருவனந்தபுரம் மற்றும் மங்களூரு ஆகிய விமான நிலையங்களின் பராமரிப்பு நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது என்று, கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட விமான நிலையங்களை பராமரிப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடன் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டிருந்தது. மொத்தம் 10 நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை பெற போட்டியிட்டன.
இந்நிலையில் இந்த ஐந்து மத்திய தர விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தமானது பிரதமர் மோடியின் நண்பரான கவுதம் அதானியின் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
போட்டியிட்ட மொத்தம் பத்து நிறுவனங்களில் அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் கோரி இருந்த பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னௌ, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய 5 விமானங்களை பராமரித்து நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி விமான நிலைய ஒப்பந்தம் தொடர்பாக தகவல் ஏஎதுவும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணத்திற்குப் பிறகு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த ஜூலை 1 முதல் தடை!

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



