மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்: ரயில்வே நிர்வாகத்திற்கு பாதுகாப்பு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருவகை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே நிர்வாகமும்

News image
Updated On :28 பிப்ரவரி 2019, 4:39 am

DIN


புதிதில்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருவகை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே நிர்வாகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய ரயில்வே பாதுகாப்பு படை அறிக்கை அனுப்பியுள்ளது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது

இந்நிலையில், அனைத்து ரயில்வே நிர்வாகமும் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே மேலாளர்களுக்கும் இந்திய ரயில்வே பாதுகாப்பு படை அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எல்லா ரயில்களையும் மிகுந்த பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் இயக்க பகுதிகள் மற்றும் ரயில் நிலையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு எந்த ரயில்களும் இதுவரை ரத்து செய்யப்படவில்லை.

காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து ஸ்ரீநகர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் நிலவும் நிலவரம் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானப் படைத்தளங்கள், கடற்படைத் தளங்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. மும்பை, அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.