மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொல்கத்தாவில் கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டம் கொள்கை, கேட்பாடு இல்லாதது: ராஜீவ் பிரதாப் ரூடி

கொல்கத்தாவில் கூடிய எதிர்க்கட்சிகளுக்கு முறையான கொள்கை இல்லை, கோட்பாடு இல்லை என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக

News image
Updated On :19 ஜனவரி 2019, 12:39 pm

DIN

புது தில்லி: கொல்கத்தாவில் கூடிய எதிர்க்கட்சிகளுக்கு முறையான கொள்கை இல்லை, கோட்பாடு இல்லை என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக அதிருப்தி எம்பி சத்ருக்கன் சின்ஹா மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று அக்கட்சியின் தேசியச் செய்தித் தொடா்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். 

கொல்கத்தாவில் சனிக்கிழமை எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி இந்தக் கூட்டத்தை நடத்தினார். 

இந்தக் கூட்டத்தில் பாஜக அதிருப்தி எம்பி சத்ருக்கன் சின்கா கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் மோடியை ‘திருடா்’ என விமா்சித்து பேசினார். 

இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் ராஜீவ் பிரதாப் ரூடி பேசுகையில், கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைப் பார்த்து பாஜக பயப்படவில்லை. இக்கூட்டம் சந்தா்ப்பவாத அரசியலுக்காகச் சோ்ந்த கூட்டமாகும். இக் கூட்டத்துக்கு முறையான கொள்கை இல்லை, கோட்பாடு இல்லை. தோ்தல் நெருங்கும் வேளைகளில் இவ்வாறான கூட்டங்கள் நடைபெறுவது இயல்பான விஷயமாகும். 

கொல்கத்தாவில் ஜனநாயகத்தைக் கொலை செய்யும் மம்தா பனார்ஜி, ஜனநாயகத்தை காப்பாற்றுவது தொடா்பாகப் பேசி வருவது நகைப்பிற்குரியது. இந்த எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தால் அதன் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பார்?

சத்ருக்கன் சின்கா தன்னை அதி புத்திசாலி என நினைத்துக் கொள்கிறார். பாஜகவில் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை அவர் விட்டுத்தரத் தயாராக இல்லை. இதனால் தான் இன்னும் பாஜகவை விட்டு விலகாமல் உள்ளார். 

ஆனால், அதேநேரம், சுயலாபத்துக்காக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். இவர் மீது கட்சித் தலைமை விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றார் ராஜீவ் பிரதாப் ரூடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.