முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

புதிய வழக்குகளை 4 நாள்களில் விசாரணைக்கு ஏற்க நடவடிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்குகளை, அவை தாக்கல் செய்யப்பட்ட 4 நாள்களுக்குள் விசாரணைக்கு ஏற்கும் வகையில் புதிய நடைமுறையை ஏற்படுத்த இருப்பதாக

News image
Updated On :24 ஜனவரி 2019, 12:53 am IST


உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்குகளை, அவை தாக்கல் செய்யப்பட்ட 4 நாள்களுக்குள் விசாரணைக்கு ஏற்கும் வகையில் புதிய நடைமுறையை ஏற்படுத்த இருப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மனுவை பரிசீலிப்பது, முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டிய வழக்குகளை முடிவு செய்வது உள்ளிட்டவை குறித்து புதிய நடைமுறைகள் உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, வழக்குரைஞர் ஒருவர், தான் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், மூன்று நாள்கள் கடந்த பின்னரும் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியலில் இடம் பெறவில்லை என்று தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோயிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவர் கூறியதாவது:
ஒரு புதிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அது தானாவே நான்கு நாள்களுக்குள் விசாரணைக்கு வரும் வகையில் புதிய நடைமுறையை விரைவில் ஏற்படுத்த இருக்கிறோம். மனுவை விசாரிக்க 4 நாள்கள் வரை காத்திருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பதிவாளரிடம் வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுக்கலாம். 
இதன் பிறகு நீதிபதிகள் அந்த மனுவை அவசர வழக்காக ஏற்க வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்வார்கள் என்றார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.