முன்னாள் முதல்வர் சித்தராமையா பாஜக மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதாக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் இருந்து திரும்பிய பின்னர் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த எடியூரப்பா கூறியதாவது:
நான் இப்போதுதான் தில்லியில் இருந்து வருகிறேன். கர்நாடகத்தில் ஆட்சி கலைப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கட்சி மேலிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும் தற்போதைக்கு அமைதி காக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
ஏனென்றால் இன்னும் சில தினங்களில் காங்கிரஸ், மஜத இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பாஜக தரப்புக்கு எம்எல்ஏக்களை அனுப்பவதன் மூலம் சித்தராமையா தனக்கு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று தெரிவித்தார்.