தில்லி மக்களே உஷார்: இன்று பிற்பகலில் மணல் புயல் வீசக் கூடும்!

புது தில்லியில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், இன்று பிற்பகலுக்கு மேல் புது தில்லியில் மணல் புயல் வீச வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
தில்லி மக்களே உஷார்: இன்று பிற்பகலில் மணல் புயல் வீசக் கூடும்!


புது தில்லி: புது தில்லியில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், இன்று பிற்பகலுக்கு மேல் புது தில்லியில் மணல் புயல் வீச வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

இன்று புது தில்லியில் 30.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்றும், பாலம் பகுதியில் 33.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திங்கட்கிழமையான நேற்று புது தில்லியில் ஜூன் மாதத்தின் மிக வெப்பமான நாளாக பதிவானது. பாலம் பகுதியில் நேற்று 48 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com