டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

புல்வாமாவில் இறந்த வீரர் உடலில் கட்சிக் கொடி: அரசியல் கட்சிகள் கண்டனம்

புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர் உடலில் கட்சிக் கொடி போர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 2:48 pm IST

புது தில்லி: புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர் உடலில் கட்சிக் கொடி போர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜம்முகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் அஜித் சாகோ உயிரிழந்தார். அவருடைய உடல் சொந்த ஊரான படாசோனாலோவில் அடக்கம் செய்யப்பட்டது.

அவருடைய உடல் கொண்டு வரப்பட்ட சவப்பெட்டியில் வழக்கப்படி தேசியக்கொடி போர்த்தப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த மாநிலத்தின் ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியினர், உடலின் மீது தங்களது கட்சிக் கொடியை போர்த்தியுள்ளனர்.

சிறிது நேரத்தில் அந்தக் கொடியை உயிரிழந்த வீரரின் சகோதரர் பரமேஸ்வர் கட்சிக்கொடியை அகற்றினார். இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த செயலுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பா.ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்ததுடன்,பிஜு ஜனதா தளம் மன்னிப்பு கோரவேண்டும். எனக் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பிஜு ஜனதா தளம் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.  “ யார் இதற்கு பொறுப்பு என்பதை கட்சி கண்டுபிடித்து,  அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவைத்துள்ளது.

இதற்கிடையே இவ்விவகாரத்தை அரசியல் ஆக்கவேண்டாம் என்று உயிரிழந்த வீரரின் சகோதரர் பரமேஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.