பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் 

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள், அதில் பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

Published On :

புது தில்லி: பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள், அதில் பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினை செவ்வாய் காலை ஹேக்கர்கள் முடக்கினார்கள்.  அவர் அதன் முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ள சில விடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்

இதையடுத்து உடனடியாக இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. மாலைவரை இதே நிலை தொடர்கிறது. விரைவில் திரும்புவோம் என்ற தலைப்புடன், இணையதளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை புகைப்படத்துடன் இணைய பயனாளர்கள் பல்வேறு விதங்களில்  கேலியாகவும் கிண்டல் செய்தும் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

முன்னதாக 2018-ல் ஜம்மு காஷ்மீர் கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டத கொடூர சம்பவத்திற்கு நியாயம் கோரி, மாநில பாஜக இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது என்பது நினைவுகூறத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.