டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் 

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள், அதில் பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

News image
Updated On :5 மார்ச் 2019, 6:46 pm IST

புது தில்லி: பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள், அதில் பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினை செவ்வாய் காலை ஹேக்கர்கள் முடக்கினார்கள்.  அவர் அதன் முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ள சில விடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்

இதையடுத்து உடனடியாக இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. மாலைவரை இதே நிலை தொடர்கிறது. விரைவில் திரும்புவோம் என்ற தலைப்புடன், இணையதளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை புகைப்படத்துடன் இணைய பயனாளர்கள் பல்வேறு விதங்களில்  கேலியாகவும் கிண்டல் செய்தும் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

முன்னதாக 2018-ல் ஜம்மு காஷ்மீர் கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டத கொடூர சம்பவத்திற்கு நியாயம் கோரி, மாநில பாஜக இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது என்பது நினைவுகூறத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.