மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மாயாவதியின் முன்னாள் செயலாளரிடம் ரூ.225 கோடி பினாமி சொத்து பறிமுதல்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் முன்னாள் செயலாளரிடம் இருந்து ரூ.225 கோடி மதிப்புள்ள பினாமி சொத்து ஆவணங்களை வருமான வரி துறை பறிமுதல் செய்துள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2019, 9:19 pm IST

லக்னௌ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் முன்னாள் செயலாளரிடம் இருந்து ரூ.225 கோடி மதிப்புள்ள பினாமி சொத்து ஆவணங்களை வருமான வரி துறை பறிமுதல் செய்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதியின் முன்னாள் செயலாளர் நெட் ராம்.  உத்தர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர் . கடந்த 2002-2003ம் ஆண்டில் மாயாவதி உ.பி முதல்வராக இருந்தபோது அவருக்கு செயலாளராக இருந்தவர்.

அத்துடன்  கலால் துறை தலைவர், சர்க்கரை தொழிற்சாலை மற்றும் கரும்பு துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் இவர் இருந்துள்ளார்.இவர் மீது ரூ.90 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தில்லி மற்றும் லக்னௌ நகரங்களில் இவரது வீடு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் செவ்வாயன்று சோதனை நடத்தினர்.

26 மணிநேரம் வரை நீடித்த இந்த சோதனையில் ரூ.1.64 கோடி மதிப்பிலான பணம் கைப்பற்றப்பட்டது.  இவர் பெயரில் உள்ள வங்கி லாக்கரை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

அத்துடன் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மோண்ட் பிளாங்க் பேனாக்கள், பினாமி பெயரிலான 4 ஆடம்பர ரக கார்கள் மற்றும் ரூ.225 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகளுக்கான ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற உறவினர்கள், பங்குகள் வைத்துள்ள 30 துணை நிறுவனங்களுக்கான ஆவணங்களையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நெட் ராம் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தனக்கு ஒரு தொகுதி ஒதுக்கும்படி மாநிலக் கட்சி ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். இந்த தகவலை அடுத்தே வருமான வரித்  துறையின் கண்காணிப்பின் கீழ் அவர் வந்துள்ளார் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.