ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

உ.பியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை 'சாராயம்' என்று விமர்சித்தாரா மோடி?: வெடித்தது புதிய சர்ச்சை 

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியை 'சாராயம்' என்று பிரதமர மோடி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.   

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:29 am

IANS

மீரட்: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியை 'சாராயம்' என்று பிரதமர மோடி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.   

உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் மோடி வியாழனன்று மீரட் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக் தள் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் பெயர்களில் இருந்து முதல் பகுதி / எழுத்தை எடுத்து அக்கூட்டணியை 'சராப்' என்று விமர்சித்தார்.          

'சராப்' என்ற உருது வார்த்தைக்கு கானல் நீர் / மாயம் என்று பொருள். ஆனால் ஹிந்தியில் இதே ஒலியில் அமைந்துள்ள 'ஷ்ராப்' என்ற வார்த்தைக்கு சாராயம் என்று பொருள்.

எனவே உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை 'சாராயம்' என்று பிரதமர மோடி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.   

இதுதொடர்பாக உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ்  தனது ட்விட்டர் பக்கத்தில், 'வெறுப்பின் மனதினை எங்கும் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் தற்போது தேர்தல் நெருங்கி வருவதால், இரண்டு வார்த்தைகளுக்கு வித்தியாசம் தெரியாமல் மாயக்காட்சிகளை உருவாக்குகிறாரகள்' என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா செய் தியாளர்களிடம் பேசும்போது, 'இதுதான் ஒரு பிரதமர் பேசும் முறையா? இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? உங்கள் வார்த்தைகளை வாபஸ் பெற்று உ.பி மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்' என்று மோடியிடம் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.