தேநீர் கோப்பையில் 'நானும் சவ்கிதார்': அவசரமாக வாபஸ் பெற்ற ரயில்வே 

ரயில்வே பயணத்தின் போது வழங்கப்படும் தேநீர் கோப்பையில் 'நானும் சவ்கிதார்' விளமபரம் இடமபெற்றிருந்ததைத் தொடர்ந்து அவை ரயில்வேயால் அவசரமாக வாபஸ் பெறப்பட்டன.
தேநீர் கோப்பையில் 'நானும் சவ்கிதார்': அவசரமாக வாபஸ் பெற்ற ரயில்வே 
Published on
Updated on
1 min read

புது தில்லி: ரயில்வே பயணத்தின் போது வழங்கப்படும் தேநீர் கோப்பையில் 'நானும் சவ்கிதார்' விளமபரம் இடமபெற்றிருந்ததைத் தொடர்ந்து அவை ரயில்வேயால் அவசரமாக வாபஸ் பெறப்பட்டன.

புதுதில்லியில் இருந்து, உத்தராகண்ட் மாநிலம், காத்கோடம் நகருக்கு காத்கோடம் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இந்த ரயிலில் பயணிகளுக்கு தேநீர் மற்றும் சூப் வழங்க பயன்படுத்தப்பட்ட காகிதக் கோப்பையில், பிரதமர் மோடியின் சமீபத்திய தேர்தல் முழக்கமான  "நானும் சவ்த்தார் (காவலாளி)" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது கண்டறியப்பட்டது.

இதனால் ரயில்வே துறைசார்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்படுவதாக, காத்கோடகம் சதாப்தி ரயிலில் வழங்கப்பட்டது என்ற வாசகத்துடன் அந்த கோப்பையை புகைப்படம் எடுத்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.இது வைரலாகப் பரவியது

இதையடுத்து ரயில்வேதுறை அதிகாரிகளின்  இதுகுறித்து விசாரணை நடத்தினர்.அதில் குறிப்பிட்ட கோப்பைகள் 'சங்கல்ப்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டன என்று தெரிய வந்தது. உடனடியாக  அனைத்து காகித கோப்பைகளையும் ரயில்வே துறை வாபஸ் பெற்றது.  அதேசமயம் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளதாக செய்திக வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com