மேற்கு வங்கத்தில் மத்தியப் படைகள் இருக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

மேற்கு வங்கத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 
மேற்கு வங்கத்தில் மத்தியப் படைகள் இருக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்
Published on
Updated on
1 min read

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை மத்தியப் படைகள் மேற்கு வங்கத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் ஏற்படுத்தப்பட்டு வரும் வன்முறைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துகிறோம். அம்மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்ட மம்தா கட்சியினர், மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியது.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை மத்தியப் படைகள் அங்கு உஷார் நிலையில் வைக்கப்பட வேண்டும். அதிலும் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை மத்தியப் படைகள் மேற்கு வங்கத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com