காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ரஃபேல் தீர்ப்பு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு வித்திட்டுள்ளது: ராகுல் காந்தி

ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ரஃபேல் ஊழலை விசாரிப்பதற்கான மிகப் பெரிய கதவை திறந்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி (கோப்புப்படம்)

Published On :31 ஜனவரி 2024, 6:37 pm IST


ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ரஃபேல் ஊழலை விசாரிப்பதற்கான மிகப் பெரிய கதவை திறந்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த தீர்ப்பு குறித்து டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில்,

"உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப், ரஃபேல் ஊழல் குறித்து விசாரணை நடத்த மிகப் பெரிய கதவை திறந்துவைத்துள்ளார். எனவே, இதுகுறித்து முழு அக்கறையுடன் விசாரணையைத் தொடங்க வேண்டும். இந்த ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 

"உச்சநீதிமன்றத் தீர்ப்பை வாசிக்காமலேயே அதைக் கொண்டாடுவது பாஜகவின் வழக்கமாக உள்ளது. போர் விமானத்தின் விலை, தொழில்நுட்ப விவரக் குறிப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட விவகாரங்கள் சட்டப்பிரிவு 32-இன் வரம்புக்குள் வராது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே ரஃபேல் வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொள்வதற்கான கதவுகளைத் திறந்துவைத்துள்ளது.

ரஃபேல் தீர்ப்பில் பாஜக தேசத்தை தவறாக வழிநடத்துகிறது. எந்தவித அரசியல் அழுத்தமும் இல்லாமல் சிபிஐயை விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.