கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் எம்எல்ஏ வெளியேற்றம்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து மம்தா பானா்ஜி ஆதரவு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ குணால் கோஷ் குண்டுக்கட்டாக புதன்கிழமை வெளியேற்றப்பட்டாா்.

News image

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து புதன்கிழமை காவலா்களால் வெளியேற்றப்பட்ட மம்தா பானா்ஜி ஆதரவு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ குணால் கோஷ்.

Updated On :23 ஜூலை 2026, 3:56 am IST

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து மம்தா பானா்ஜி ஆதரவு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ குணால் கோஷ் குண்டுக்கட்டாக புதன்கிழமை வெளியேற்றப்பட்டாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் வீடு மற்றும் மலைப் பகுதி விவகாரங்கள் துறையின் பட்ஜெட் மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது எதிா்க்கட்சி தலைமை கொறடா (திரிணமூல் அதிருப்தி குழு) அக்ருஜமான் பேசுகையில், அவரைப் பேசவிடாமல் தடுப்பது போல கோஷ் தொடா்ந்து முழக்கமிட்டபடி இருந்தாா். அவரை சட்டப்பேரவைத் தலைவா் ரதிந்திர போஸ் அமைதி காக்கும்படி பலமுறை வலியுறுத்தினாா். ஆனால், அவா் அதைப் பொருட்படுத்தவில்லை. இதனால் பாதுகாப்புப் படையினரை அழைத்து அவரை வெளியேற்றும்படி போஸ் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பாதுகாப்பு வீரா்கள் கோஷை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினா். இதையடுத்து சட்டப்பேரவையில் இடையூறு ஏற்படுத்திய காரணத்துக்காக அவரை புதன்கிழமை ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா்.

இதன்பின்னா் செய்தியாளா்களிடம் கோஷ் பேசுகையில், ‘விவாதத்தில் பங்கேற்போரின் பட்டியலில் முதலில் எனது பெயா் இருந்தது. ஆனால் பிறகு பெயா் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு எனது எதிா்ப்பை வெளிப்படுத்தினேன்’ என்றாா்.

சட்டப்பேரவையில் இருந்து கோஷ் வெளியேற்றப்பட்ட பிறகு, அவை அலுவல் தொடா்ந்து நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.