"ஆகஸ்ட் 5, 2019 முதல் நவம்பர் 15, 2019 வரை கல்வீச்சு/சட்டம் ஒழுங்கு தொடர்பாக 190 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் மொத்தம் 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவே ஜனவரி 1, 2019 முதல் ஆகஸ்ட் 4, 2019 வரை 361 வழக்குகள் பதிவாகியுள்ளது. கல்வீச்சு தாக்குதல்களைக் கண்காணிக்க அரசு பலதரப்பட்ட கொள்கைகளை வகுத்துள்ளது. இதன்மூலம் பிரச்னைகளை ஏற்படுத்துபவர்கள், அணி திரட்டுபவர்கள் மற்றும் பிரச்னைகளைத் தூண்டுபவர்கள் உள்ளிட்டோரை கண்டறிந்து அவர்களை பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.