ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒடிசாவில் போதையில் வாகனம் ஓட்டிய 426 'குடி'மகன்கள் பிடிபட்டனர்!

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற சோதனையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி 426 பேரை ஒடிசா மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :16 செப்டம்பர் 2019, 11:51 am

Muthumari

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற சோதனையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி 426 பேரை ஒடிசா மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த அபாராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தும் செய்திகளும் வந்துகொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிலையில், ஒடிசாவில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி மாநிலம் முழுவதும் வாகன சோதனைகளில் ஈடுபட்ட போலீசாரிடம், குடிபோதையில் 426 பேர் சிக்கியுள்ளனர்.

சுமார் 5,000 வாகன ஓட்டிகளை சோதனை செய்ததில், அவர்களில் 426 பேர் போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் 141 பேரை போலீசார் கைது செய்தனர். பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு  குடிபோதையில் வாகனம் ஓட்டுவது காரணமாக இருக்கிறது என்று போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.