கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு: 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக வெங்கய்ய நாயுடு பெருமிதம்

கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெங்கய்ய நாயுடு பெருமிதம் தெரிவித்தார். 

News image
Updated On :7 ஆகஸ்ட் 2019, 7:38 am

DIN

புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 26-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூட்டத்தொடரை ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான தீர்மானம், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா-2019, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த (யுஏபிஏ) மசோதா, முத்தலாக் தடை மசோதா, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா-2019, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கையை 30-லிருந்து, 33-ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா, வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா, தொழிலாாளர் சட்டத்திருத்த மசோதா, ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவுச்சின்னம் மசோதா, ஊதியங்கள் சட்ட மசோதா, அணை பாதுகாப்பு மசோதா, ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதா, போக்ஸோ சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவில் 35 அமர்வுகளில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமிதம் தெரிவித்தார். 

பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். சுஷ்மா ஸ்வராஜ் மறைவால் சிறந்த நாடாளுமன்ற வாதியையும், மக்களின் உண்மையான குரலையும் இந்த தேசம் இழந்துள்ளது என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.

இதையடுத்து மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.