மேற்கு வங்கத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரம், கேரளம், தில்லி, ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 1,409 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 21,393 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனாவால் 681 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் அங்கு கரோனா வைரஸழல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 481-ஆக உயர்ந்துள்ளது.