எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இப்படியும் பாடம் நடத்தலாம் என்பதை வெளிப்படுத்தும் மேற்கு வங்க ஆசிரியர்

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் ஒருவர் நெட்வொர்க் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக மரத்தில் பணியிடத்தை அமைத்து வகுப்புகளை நடத்தி வருகிறார்.

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 11:25 am

DIN


மேற்கு வங்கத்தில் ஆசிரியர் ஒருவர் நெட்வொர்க் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக மரத்தில் பணியிடத்தை அமைத்து வகுப்புகளை நடத்தி வருகிறார்.

மேற்கு வங்க மாநிலம் பங்குரா கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சுப்ரதோ பாடி. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால், இவர் இணையதளத்தின் ஊடாக வகுப்புகளை நடத்தி வருகிறார்.

இணையளத்தின் மூலம் வகுப்புகளை நடத்துவதால், அடிக்கடி நெட்வொர்க் பிரச்னைகளால் இடையூறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனக்கான பணியிடத்தை அவர் மரத்தில் அமைத்துக்கொண்டார்.

இதுபற்றி அவர் பேசுகையில், "எங்கள் கிராமத்தில் எல்லா இடங்களிலும் எங்களுக்கு சிக்னல் கிடைக்காது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நான் பல்வேறு வகுப்புகளை நடத்துவேன்" என்றார்.

இந்த வித்தயாசமான அமைப்புமுறை, இணையதளத்தின் ஊடாக எவ்வித இடையூறுமின்றி வகுப்பு எடுக்க முடிவதை உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.