ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மணிப்பூரில் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

கரோனா எதிரொலியாக மணிப்பூரில் அரசுப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும்

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 9:24 am

PTI

இம்பால்: கரோனா எதிரொலியாக மணிப்பூரில் அரசுப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கல்வி ஆணையர் ரஞ்சித் சிங் கூறுகையில்,

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது. இந்நிலையில்,  மணிப்பூரில் 2019-20 கல்வியாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. 

இதையடுத்து,  தேர்வின்றி 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதத்தில் மணிப்பூர் உயர்நிலை கல்வி கவுன்சில் நடத்திய 11-ஆம் வகுப்புக்கான தேர்வில், ஐந்து பாடங்களின் வினாத்தாள் கசிந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.