அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கர்நாடக வேளாண்துறை அமைச்சர், மனைவி, மருமகனுக்கு கரோனா

கர்நாடக மாநில வேளாண்துறை அமைச்சர், அவரது மனைவி மற்றும் மருமகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கர்நாடக வேளாண்துறை அமைச்சர், மனைவி, மருமகனுக்கு கரோனா

Updated On :1 ஆகஸ்ட் 2020, 10:07 am

PTI

கர்நாடக மாநில வேளாண்துறை அமைச்சர், அவரது மனைவி மற்றும் மருமகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் பி.சி. பட்டீல் இது பற்றி கூறுகையில், தனக்கும், தனது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விடியோவில், தனக்கும் தனது மனைவி வனஜாவுக்கும் கரோனா அறிகுறி எதுவும் இல்லை என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இருவரும் விரைவில் குணமடைந்து, மீண்டும் விரைவாக பணிக்குத் திரும்புவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே நிலையில், பட்டீல் தனது சுட்டுரையில், வெள்ளிக்கிழமை இரவு தனது மருமகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பட்டீலுக்கு முன்பே, கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சுற்றுலாத் துறை அமைச்சர் சி.டி. ரவி ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும், கர்நாடக மாநில முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தில் சில ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து முதல்வர் பி.எஸ். எடிரப்பாவும் சில வாரங்களுக்கு முன்பு தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். 

கர்நாடக மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1.24 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,314 பேர் மரணம் அடைந்துள்ளனர். 72 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.