இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தலித் இளைஞரை தாக்கிய காவல் ஆய்வாளர் இடைநீக்கம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை தாக்கிய காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

News image

Cop suspended, arrested for beating Dalit man in Andhra Pradesh

Updated On :6 ஆகஸ்ட் 2020, 8:20 am

ANI

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை தாக்கிய காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஸ்ரீகாகுளம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் பர்தர் கூறுகையில், 

காசிபுகா காவல் நிலைய வட்ட ஆய்வாளர் வேணுகோபால் ராவ் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கியுள்ளார்.  இதையடுத்து, அந்த நபர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

இதையடுத்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்தனர். வேணுகோபால் ராவ் தலித் நபரை அடித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 

மேலும், அந்த ஆய்வாளரை இடைநீக்கம் செய்துள்ளனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.