அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தேசிய தூய்மை மையம்: பிரதமர் மோடி துவக்கிவைப்பு

​தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி சமாதியில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

News image
​தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி சமாதியில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.
Updated On :8 ஆகஸ்ட் 2020, 1:06 pm

DIN


தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி சமாதியில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி அங்கு தூய்மை இந்தியா திட்டம் குறித்த விடியோ ஒன்றையும் பார்வையிட்டார்.

இதன்பிறகு மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி பேசியதாவது:

"நாம் அனைவரும் தற்போது அசுத்தமே வெளியேறு என்ற பிரசாரத்தின் அங்கம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கு உள்ள குழந்தைகள் உள்பட அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மகாத்மா காந்தியின் மதிப்பீடுகளையும், கொள்கைகளையும் ஏற்க ஒட்டுமொத்த நாடும் முன்வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக, நாட்டில் லட்சக்கணக்கானோர் காந்தியால் ஈர்க்கப்பட்டு தூய்மை இந்தியா திட்டத்தை தங்களது வாழ்வின் லட்சியமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன்காரணமாகத்தான் வெறும் 60 மாதங்களில் 60 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த முடிந்தது.

2014-க்கு முன்பு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், என்னவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 60 சதவிகித மக்கள் திறந்தவெளி கழிப்பறையைப் பயன்படுத்தி வந்தபோது, பொது முடக்கத்தை அமல்படுத்தியிருக்க முடியுமா?" என்றார் பிரதமர் மோடி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.