பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

'பள்ளிகள் திறப்பு பற்றி மத்திய அரசு முடிவு செய்யவில்லை'

இந்தக் காலகட்டத்துக்குள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்பது போன்ற எந்த கால நிர்ணயத்தையும் மத்திய கல்வித் துறை வகுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
'பள்ளிகள் திறப்பு பற்றி மத்திய அரசு முடிவு செய்யவில்லை'
Updated On :11 ஆகஸ்ட் 2020, 6:49 am

PTI


நாடு முழுவதும் பள்ளிகளைத் திறப்பதற்காக எவ்வித காலத்தையும் மத்திய கல்வித் துறை நிர்ணயிக்கவில்லை எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல மாநிலங்களில் தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கும் சூழ்நிலை உருவாகவில்லை என்றும் இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, பள்ளி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தாலும், இதுவரை எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒரே ஒரு யூனியன் பிரதேசத்தைத் தவிர்த்து வேறு எந்த மாநிலமோ யூனியன் பிரதேசங்களோ விரைவில் பள்ளிகளைத் திறப்பதற்கான சூழ்நிலையில் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் மாத இறுதியில் உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. அதே சமயம் இது பற்றி முடிவு செய்தாலும் கூட, அது குறித்த அறிவுறுத்தலை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்க முடியும், அந்தந்த மாநில அரசுகள், சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.