மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொலைபேசி ஒட்டுக் கேட்பு: விசாரணைக்கு உத்தரவிட பிரதமருக்கு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

அரசியல் ஆதாயத்துக்காக தனது தொலைபேசி ரகசியமாக ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு மீது குற்றம்சாட்டியுள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு,

News image
சந்திரபாபு நாயுடு கண்டனம்
Updated On :17 ஆகஸ்ட் 2020, 8:32 pm

DIN

அமராவதி: அரசியல் ஆதாயத்துக்காக தனது தொலைபேசி ரகசியமாக ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு மீது குற்றம்சாட்டியுள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு, இதுதொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

எதிா்க்கட்சியினா், வழக்குரைஞா்கள், ஊடகத்தினா், சமூக ஆா்வலா்கள் ஆகியோரின் தொலைபேசிகளும் ரகசியமாக ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

தனியாா் துறையினா் மூலம் சட்ட விரோதமாக நவீன தொழில்நுட்பம் மூலம் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், சட்டவிரோதமான இந்தச் செயல் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று சந்திரபாபு நாயுடு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆந்திர மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா் என்றும் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

ஆகையால், இந்த விவகாரத்தில் பிரதமா் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.