நினைவு தினம் அல்லாத ஒரே தலைவர்: சுபாஷ் சந்திரபோஸை நினைவுகூர்ந்த காங்கிரஸ் தலைவர்
நினைவு தினம் அனுசரிக்கப்படாத ஒரே விடுதலைப் போராட்ட வீரர் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நினைவு கூர்ந்துள்ளார்.


நினைவு தினம் அனுசரிக்கப்படாத ஒரே விடுதலைப் போராட்ட வீரர் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நினைவு கூர்ந்துள்ளார்.
சுபாஷ் சந்திரபோஸ் ஆகஸ்ட் 18, 1945 அன்று தைவானில் விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அவர் உயிரிழந்தாரா? இல்லையா? என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. முன்னதாக, தைஹாகுவில் கடந்த 1945-ஆம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்து விட்டார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்படும் இன்றைய தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுபாஷ் சந்திர போஸை நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தைஹாகுவில் 1945 ஆகஸ்ட் 18 அன்று சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் பலியானார் என்று கூறப்படுகிறது, இருப்பினும், அவர் இறந்தாரா இல்லையா என்பது எந்த ஆதாரங்களாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. தலைவர்களில் சுபாஷ் சந்திர போஸூக்கு மட்டுமே பிறந்த தினம் மட்டும் அனுசரிக்கப்படுகிறது, நினைவு தினம் யாருக்கும் தெரியாது' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...