மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சோனியாவுக்கு எதிராகக் கடிதம்: பாஜகவின் சதி இருப்பதாக ராகுல் புகார்; காரசார விவாதம்

சோனியாவுக்கு எதிராகக் கடிதம் எழுதிய விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அது குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் ஏற்பட்டுள்ளது.

News image
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
Updated On :24 ஆகஸ்ட் 2020, 8:07 am

DIN

புது தில்லி: சோனியாவுக்கு எதிராகக் கடிதம் எழுதிய விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அது குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்றும், தலைமை மாற்றம் தேவை என்றும் சில முக்கியத் தலைவர்கள் கடிதம் எழுதியதை அடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தில்லியில் இன்று காலை அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா குறித்து கடிதம் எழுதியிருப்பது பாஜகவின் சதி என்று குற்றம்சாட்டியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல், சோனியாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை மாற்றம் குறித்து கடிதம் எழுத வேண்டியதன் அவசியம் என்ன? தலைமை மாற்றம் வேண்டி காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதம், பொது வெளியில் வெளியானது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் சிலருக்கும் இடையே காரசார வாக்குவாதம் எழுந்துள்ளது.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் கபில் சிபல் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ராகுல் காந்தி, நாங்கள் பாஜகவுடன் இணைந்துவிட்டதாகக் கூறுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக எந்த விவகாரத்திலும் பாஜக ஆதரவாக ஒரு கருத்தைக் கூட கூறியதில்லை. ஆனால் தற்போது நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், கட்சியை கூட்டுத் தலைமை வழிநடத்த வேண்டும்; அமைப்பு ரீதியாகவும், தலைமையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் அண்மையில் கடிதம் எழுதினர். அதில், கபில் சிபலும் ஒருவர்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் குலாம் நபி ஆஸாத், பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.