ஆந்திரப் பிரதேசத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 7 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ஆந்திர சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, புதிதாக 663 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,69,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,55,485 பேர் நோயத் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும் 7 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7,003 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 6,924 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.