ஜூலை 23-க்குப் பின்.. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 4.28 லட்சமாகக் குறைவு
கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 132 நாள்களுக்குப்பின் 4.28 லட்சமாக குறைந்துள்ளது.


புது தில்லி: கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 132 நாள்களுக்குப்பின் 4.28 லட்சமாக குறைந்துள்ளது.
நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 4.28 லட்சமாக (4,28,644) குறைந்துள்ளது. 132 நாள்களுக்குப்பின் இது மிகக் குறைந்த அளவு. இதற்கு முன் கடந்த ஜூலை 23ம் தேதி சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,167 ஆக இருந்தது.
நாள்தோறும் புதிதாக தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை, கடந்த 3 நாள்களாக சுமார் 30 ஆயிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 43,062 பேர் குணமடைந்துள்ளனர்.
நாள்தோறும் குணமடைபவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட கடந்த 5 நாள்களாக அதிகரித்து வருகிறது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 89,32,647-ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோர் வீதம் 94.03 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 501 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...