மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கர்நாடகத்தில் கரோனா 2-ஆம் அலை வீசும்: நிபுணர் குழு அறிக்கை

கர்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று 2-ஆம் அலை வீசும் என்று 12 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக  சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

News image
கர்நாடக  சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் (கோப்புப்படம்)
Updated On :4 டிசம்பர் 2020, 12:49 pm

DIN


கர்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று 2-ஆம் அலை வீசும் என்று 12 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக  சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதைப் போன்று கர்நாடகத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாள்களில் இரவு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுதாகர், ''கர்நாடகத்தில் வரும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் கரோனா வைரஸ் தொற்று 2-ஆம் அலை வீசும் என்று 12 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும், பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கரோனா பரிசோதனைகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.