மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற ராஜஸ்தான் முதல்வர் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று தவறான நடவடிக்கை மேற்கொண்டதற்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட் வலியுறுத்தியுள்ளார்.

News image
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
Updated On :4 டிசம்பர் 2020, 11:10 am

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று தவறான நடவடிக்கை மேற்கொண்டதற்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 9 நாள்களாக தில்லியில் போராடி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் இச்சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார்.

"இந்த மசோதாக்களைக் குறித்து மத்திய அரசு யாருடனும் விவாதிக்கவில்லை. இதன் காரணமாக இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சாலைகளில் உள்ளனர். பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இந்த சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் சார்பில் குடியரசுத் தலைவருடன் பேச நேரம் கோரினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் "ஒரு ஜனநாயக நாட்டில் உரையாடல் என்பது எப்போதும் நடைபெற வேண்டும். அது நடந்தால் எதிர்ப்பு இருக்காது. மக்கள் வருத்தப்பட வேண்டியதில்லை" என்று அவர் கூறினார்.

தொடர்ந்து மத்திய அரசு உடனடியாக மூன்று புதிய விவசாய சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் விவசாயிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.