ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கும் எதிர்கட்சித் தலைவர்கள்: சீத்தாராம் யெச்சூரி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை எதிர்கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

News image

சீத்தாராம் யெச்சூரி

Updated On :8 டிசம்பர் 2020, 10:44 am

ANI

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை எதிர்கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.

இந்நிலையில் குடியரசுத் தலைவரை நாளை எதிர்கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசவுள்ளனர்.

இதுகுறித்து சீத்தாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் நாளை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பில், ராகுல் காந்தி, சரத் பாவர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். கரோனா பரவல் காரணமாக 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என க் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.