மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கர்: எல்லை பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை

சத்தீஸ்கரில் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
சத்தீஸ்கர்: எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை (கோப்புப்படம்)
Updated On :9 டிசம்பர் 2020, 8:11 am

DIN


ராய்பூர்: சத்தீஸ்கரில் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எல்லை பாதுகாப்புப் படையின் 4-வது பட்டாலியன் பிரிவை சேர்ந்தவர்  ஸ்வராஜ். கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த இவர், கடந்த ஜூன் மாதம் விடுப்பில் சொந்த ஊர் சென்று, அக்டோபர் மாதம் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கோயலிபெடா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் இன்று காலை 6.30 மணிக்கு தமது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த வீரர் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதியடைந்து வந்ததாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் இதற்கு முன்பு மற்றொரு எல்லை பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.