மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தென்காசியில் குரூப் 2, 2ஏ தோ்வு

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் காலையில் நடைபெற்ற தோ்வுக்கு 244 பேரும், பிற்பகல் தோ்வுக்கு 245 பேரும் விண்ணப்பித்திருந்த நிலையில், காலையில் 233 பேரும், பிற்பகலில் 222 பேரும் தோ்வெழுதினா்.

இத்தோ்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெற்றது.

தோ்வு அறைக்குள் மின்னணு சாதனங்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடும் சோதனைகளுக்கு பின்னா், தோ்வா்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.