மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விவசாயிகளுக்கு ஆதரவு: ஜந்தர் மந்தரில் பஞ்சாப் எம்.பி.க்கள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தில்லி ஜந்தர் மந்தரில் பஞ்சாப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image

விவசாயிகளுக்கு ஆதரவு: ஜந்தர் மந்தரில் பஞ்சாப் எம்.பி.க்கள் போராட்டம்

Updated On :10 டிசம்பர் 2020, 10:36 am

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தில்லி ஜந்தர் மந்தரில் பஞ்சாப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் எம்.பி.க்களான ரவ்னீத் சிங் பிட்டு, ஜஸ்பீர் சிங் திம்பா மற்றும் குர்ஜித் சிங் அஜுலா ஆகியோர் ஆகியோர் 24 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய திம்பா, ''வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்கள் போராட்டம் நடைபெறும் வரை நாங்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்'' என்று கூறினார்.

பின்னர் பேசிய அஜுலா, ''விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது நமது பொறுப்பு. மத்திய அரசு சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்'' என்று கூறினார்.

மேலும், குளிர்கால கூட்டத்தொடரை விரைவாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், வேண்டுமென்றே மத்திய அரசு தாமதப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.