மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குஜராத்: பணி புறக்கணிப்பு போராட்டத்தில் 30,000 மருத்துவர்கள்

நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் குஜராத்தில் 30,000 மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image

குஜராத்: பணி புறக்கணிப்பு போராட்டத்தில் 30,000 மருத்துவர்கள்

Updated On :11 டிசம்பர் 2020, 9:55 am

DIN


நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் குஜராத்தில் 30,000 மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மத்திய அரசு கடந்த நவ மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதுவரை அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை 3 ஆண்டுகள் முதுநிலை பயின்ற ஆயுர்வேத மருத்துவர்களும் இனி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு ஆயுர்வேத மருத்துவர்களிடையே வரவேற்பை பெற்றாலும், இந்திய மருத்துவ சங்கம் உள்பட பெரும்பாலான மருத்துவர்கள் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் குஜராத்தில் 30,000 மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆமதபாத்தில் மட்டும் 9,000 பேர் பங்கேற்றுள்ளனர். 

எனினும் அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து, அவசர அறுவை சிகிச்சைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் முக்கியமான பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக குஜராத் பிரிவின் இந்திய மருத்துவ சங்க பொதுச்செயலாளர் கமலேஷ் சைனி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.