/

ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 351 

ஒடிசாவில் கடந்த சில நாள்களாக கரோனா தாக்கம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது. 

News image
ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 351 
Updated On :17 டிசம்பர் 2020, 7:51 am

ANI

ஒடிசாவில் கடந்த சில நாள்களாக கரோனா தாக்கம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 351 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,25,147-ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் ஒரேநாளில் 358 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து மொத்தம் இதுவரை 3,20,208 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,061 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.