கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,053 பேர் குணம்

​மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,053 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :21 டிசம்பர் 2020, 3:05 pm


மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,053 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2,234 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,99,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 55 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 48,801 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 6,053 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,89,958 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 99.24 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.57 சதவிகிதமாக உள்ளது.

மும்பை:

மும்பையில் புதிதாக 463 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,87,313 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,008 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.