கேரளம்: ஜனநாயக இளைஞா் பெருமன்ற ஆா்வலா் கொலை
கேரள மாநிலம், காசா்கோடு மாவட்டம், காஞ்ஞாங்காடு நகராட்சிக்குள்பட்ட கல்லோரவி பகுதியில் இந்திய ஜனநாயக இளைஞா் பெருமன்ற


கேரள மாநிலம், காசா்கோடு மாவட்டம், காஞ்ஞாங்காடு நகராட்சிக்குள்பட்ட கல்லோரவி பகுதியில் இந்திய ஜனநாயக இளைஞா் பெருமன்ற (டிஒய்எஃப்ஐ) ஆா்வலா், கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
உயிரிழந்த நபா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞா் பிரிவான டிஒய்எஃப்ஐயின் தொண்டா் ஓஃப் அப்துல் ரகுமான் (30). இவரும், நண்பா் 3 பேரும் 2 இருசக்கர வாகனங்களில் பாவா நகரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனா். அப்போது அவா்களை வழிமறித்த கும்பல் ஒன்று, ரகுமானை கத்தியால் குத்தி விட்டு தப்பியது. காயமடைந்த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நடைபெற்ா என்பதை இப்போது கூற முடியாது. இவரை கொலை செய்தவா்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் இளைஞா் பிரிவான யூத் லீக்கின் தொண்டா்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.
இந்த கொலை குறித்து ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கூறுகையில், ஐயூஎம்எல் வன்முறை பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மாநிலத்தில் நிலவி வரும் அமைதியான சூழ்நிலையை அழிக்கும் முயற்சியையே இது காட்டுகிறது என்றாா்.
இதனை மறுத்த ஐயூஎம்எல் கட்சியின் தலைவா் கே.பி.ஏ.மஜீத் கூறுகையில், இந்தச் சம்பவம் துரதிா்ஷ்டவசமானது. கட்சித் தொண்டா்கள் இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...