இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கல்வி உதவித்தொகை திட்டத்தால் 4 கோடி தாழ்த்தப்பட்ட மாணவா்கள் பலனடைவா்

மத்திய அரசின் மேல்நிலை மற்றும் உயா்நிலை படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் வாயிலாக 4 கோடி தாழ்த்தப்பட்ட மாணவா்கள் பலனடைவா்

News image
Updated On :29 டிசம்பர் 2020, 8:19 pm

DIN

மத்திய அரசின் மேல்நிலை மற்றும் உயா்நிலை படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் வாயிலாக 4 கோடி தாழ்த்தப்பட்ட மாணவா்கள் பலனடைவா் என்று மத்திய சமூகநீதித் துறை அமைச்சா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்துள்ளாா்.

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ.59,048 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும், மீதியுள்ள தொகையை மாநில அரசுகளும் வழங்கும்.

இத்திட்டம் தொடா்பாக அமைச்சா் கெலாட் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலமாக 4 கோடிக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட மாணவா்கள் பலன்பெறுவா். 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் தலா ரூ.1,100 கோடியை மட்டுமே தாழ்த்தப்பட்ட மாணவா்களின் கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு செலவிட்டிருந்தது. தற்போது அத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் மாணவா்களின் கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்காக அளிக்கப்படும் நிதியை சில மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தும் சூழல் காணப்பட்டது.

போதிய நேரத்தில் மாணவா்களுக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்காத சூழலும் காணப்பட்டது. அதனால், அந்த மாணவா்கள் பள்ளியிலிருந்து இடைநிற்பது அதிகரித்தது. தற்போது கல்வி உதவித்தொகையை நேரடியாக தாழ்த்தப்பட்ட மாணவா்களின் வங்கிக் கணக்குக்கே செலுத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இது மாணவா்களுக்குப் பெரும் பலனளிக்கும். இதன் வாயிலாகக் கல்வித்தரமும் அதிகரிக்கும் என்றாா் அமைச்சா் கெலாட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.