சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மோடியுடன் நேரடியாக விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஹர்சிம்ரத் கெளர்

பிரதமர் நரேந்திர மோடியுடன் விவசாயிகள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் தெரிவித்துள்ளார்.

News image
சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் (கோப்புப்படம்)
Updated On :30 டிசம்பர் 2020, 11:18 am

DIN


பிரதமர் நரேந்திர மோடியுடன் விவசாயிகள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 35-வது நாளாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், தற்போது 6-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, ''பேச்சுவார்த்தையை நீட்டித்துக்கொண்டு போவதால் எந்த பலனையும் அடைய இயலாது. நமது விவசாயிகள் வெற்றியின் குழுவினர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் பிரதமருடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பேச்சுவார்த்தையை நீட்டித்து வைக்கப்படும் பொறிகளில் விவசாயிகள் சிக்கிவிடக் கூடாது'' என்று கூறினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்தவரும், சுக்பீா் சிங் பாதலின் மனைவியுமான ஹா்சிம்ரத் கெளா் தனது அமைச்சா் பதவியை சமீபத்தில் ராஜிநாமா செய்தார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.