தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

விஸ்வாசம் கோட்சேவுக்கா, காந்திக்கா என்பதை மோடி நிரூபிக்க வேண்டிய நேரம் இது: காங்கிரஸ்

மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை நாடகம் என்று கூறிய பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே மீது தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2020, 11:54 am

DIN


மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை நாடகம் என்று கூறிய பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே மீது தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில்,

"மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பாஜக அரசும், பிரதமரும் நேர்மையாக இருந்தால் நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் அவருடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவிக்கையில்,

"நாட்டின் சுதந்திரத்துக்காக பாஜக போராடவும் இல்லை, தியாகம் எதையும் செய்யவும் இல்லை. எனவே, சுதந்திரப் போராட்ட இயக்கத்தை அவர்கள் நாடகம் என்று அழைக்கலாம். இதுபோன்ற கருத்துகள் அவர்களுடைய உண்மை மனநிலையை வெளிப்படுத்துகிறது. காந்தியின் பெயரை அவர்கள் வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். மற்றபடி அவரைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை" என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் பேசுகையில்,

"தன்னுடைய விஸ்வாசம் கோட்சேவுக்காக அல்ல காந்திக்கா என்பதை பிரதமர் நிரூபிக்க வேண்டிய நேரம் இது. மகாத்மா காந்தியைத் தொடரந்து அவமதித்து வரும் பிரக்யா தாக்கூர் மீது பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தற்போது 'காந்தி வெறுப்பு' கூட்டத்தில் அனந்தகுமார் ஹெக்டே இணைந்துள்ளார். ஹெக்டேவின் கருத்துக்கு பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் மீது தேசத்துரோக வழக்கைப் பதிய வேண்டும். அனுராக் தாக்கூரும், ஹெக்டேவும் பாஜகவில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.