தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தில்லியில் மாற்றி யோசித்த மணமகன்: திருமணத்துக்கு முன்பு வந்து வாக்களித்தார்

பொதுவாக வாக்குப்பதிவின் போது மணமக்கள் தம்பதிகளாக வந்து வாக்களிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு தில்லியில் ஒரு மணமகன் மாற்றி யோசித்துள்ளார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2020, 9:31 am

IANS


பொதுவாக வாக்குப்பதிவின் போது மணமக்கள் தம்பதிகளாக வந்து வாக்களிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு தில்லியில் ஒரு மணமகன் மாற்றி யோசித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தனஞ்ஜெய் த்யானிக்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமணத்துக்கு முன்பே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

திருமணத்தை விட, வாக்களிப்பது முக்கியம் என்பதை வலியுறுத்தியிருக்கும் மணமகன், மற்றவர்களையும் வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

மணமகன் தனது குடும்பத்தாரோடு வந்து வாக்களித்தது மட்டுமல்லாமல், மணமகளையும் வாக்களித்துவிட்டு திருமண மண்டபத்துக்கு வருமாறு கூறிவிட்டாராம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.